Thursday, April 24, 2014

ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள் என்ன?

சுன்னத்தான இல்லறம்:

திருமணத்துக்குப் பின்னர் கொஞ்ச காலம் அவர்களை அப்படியே விட்டு விடுவோம்; அவர்களுக்காக நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துஆ செய்வோம்.


"பாரகல்லாஹு லக வ பாரக 'அலைக்க வ ஜம'அனா பைனகுமா ஃபீ ஃக்ஹைர்!"

சரியாக ஒரு ஆண்டு கழித்து - மீண்டும் அவர்களை திருமண வழிகாட்டும் மையத்துக்கு தனித்தனியே அழைப்போம்.

இதற்கென ஒரு கேள்விப்படிவம் தயாரிக்கப்பட்டு அது அந்த தம்பதியரால் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும்.

அந்தப் படிவங்களும் அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு சில ஆண்டுகளிலேயே நம்மிடம் பயிற்சி பெற்றுத் திருமணம் செய்து கொண்ட அனைவரின் இல்லற வாழ்க்கை குறித்த மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விடலாம்.

இறுதியாக நமது ஆய்வின் முடிவில் நமக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

திருமணம், இல்லறம் குறித்து வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், இளைஞிகளில் எத்தனை சதவிகிதம் பேர் - மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள்; ஒருவருடைய உரிமைகளை இன்னொருவர் மதித்து வாழ்கிறார்கள்; ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் மதித்து வாழ்கின்றார்கள்?

திருமணத்துக்குப் பின் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றின?

எத்தனை சதவிகிதம் பேர் தங்களுக்குள் தோன்றக்கூடிய கருத்துவேறுபாடுகளின் போது தொடர்ந்து பேசிக் கொண்டு கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டிய முறையில் தீர்த்துக் கொண்டார்கள்?

மேலும் அவர்களுக்குள் சவாலாக விளங்கக் கூடிய பிரச்னைகள் என்னென்ன? (அந்தப் பிரச்னைகளுக்கு கவுன்ஸலிங் மூலம் தீர்வு காணவும் வழி வகை செய்யப்படலாம்).

இன்னும்... இன்னும்..

**

அதன் பின்னர் - நமது ஆய்வுகள் தெரிவிக்கின்ற செய்திகளை நமது முஸ்லிம் சமூகத்துடன் பரிமாறிக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட ஆய்வுகளிலிருந்து முஸ்லிம்களின் புதிய தலைமுறை எண்ணற்ற பாடங்களை நிச்சயமாகப் படித்துக் கொள்ளும்! நல்லதொரு மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்!!

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29:69)

No comments:

Post a Comment