Saturday, April 19, 2014

நமது குடும்பங்களில் மகிழ்ச்சி தொலைந்து போனது ஏன்?

சுன்னத்தான இல்லறம்:

இஸ்லாமிய இல்லறம் என்பது இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்தது. வழிகாட்டும் திருமறை குர்ஆனை நமக்கென்று அனுப்பி வைக்கப்பட்டதை நினைத்து "அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்!" என்கிறான் வல்லோன் அல்லாஹு தஆலா!


"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் (rejoice!);  அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (10: 57-58)

மகிழ்ச்சி அடையுங்கள் என்றால் என்ன பொருள்?

மார்க்கத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள் என்பது தானே?

மார்க்கத்தில் பாதி என்பது நல்லதொரு பெண்ணைத் திருமணம் முடித்து வாழ்வது தானே?

“யாருக்கு அல்லாஹ் நல்ல மனைவியைக் கொடுக்கின்றானோ அவனது மார்க்கத்தின் பாதி நிறைவுபெற அல்லாஹ் உதவி விட்டான் அடுத்த பாதியில் அல்லாஹ்வை அவன் பயந்து நடந்து கொள்ளட்டும்.” (தபரானி, பைஹகி, ஹாகிம்)

ஆனால் நமது குடும்பங்களில் மகிழ்ச்சியைக் காண முடியவில்லையே? ஏன்?

காணாமல் அடித்தது யார்? ஷைத்தானின் வலையில் விழுந்தது யார்?

நாம் இன்னும் விழித்துக் கொள்ளாமல் இருப்பது ஏன்?

No comments:

Post a Comment