Tuesday, November 18, 2014

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"

"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!

"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"

"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"

Thursday, November 13, 2014

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!

Sunday, November 9, 2014

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.

"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.

"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.

"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.

"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"

Thursday, November 6, 2014

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:

1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.

சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!

கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது. அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். 

ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிடத் தகுந்த சூழல் அந்த சமயத்தில் அங்கு இல்லையெனில் - கணவனும் மனைவியும் சற்றே பொறுமை காப்பது நல்லது. தகுந்த சூழல் ஒன்று உருவாகும் வரை அவர்கள் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. 

இவர் கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க, சம்சாத் மச்சி வந்திருந்திச்சா? எல்லாத்தையும் மச்சி கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்?" - என்று கேட்டாங்களாம். அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…

உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!

பொதுவாக ஆண்களைப் பொருத்தவரை - அவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அதன் முடிவுக்கே (result) முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்த முடிவுக்கு முன்னால் நடக்கின்ற எந்த விஷயமும் ஆண்களுக்கு அவ்வளவாக இனிப்பதில்லை! 

சான்றாக - குடும்பத்தினர் - ஊர் போய்ச் சேர்ந்து விட்டார்களா என்பதை அறிந்திட மட்டுமே ஆவல். எப்படிப்போய்ச் சேர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல.