கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது. அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள்.
ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசிடத் தகுந்த சூழல் அந்த சமயத்தில் அங்கு இல்லையெனில் - கணவனும் மனைவியும் சற்றே பொறுமை காப்பது நல்லது. தகுந்த சூழல் ஒன்று உருவாகும் வரை அவர்கள் அது குறித்து வாய் திறக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது.