Sunday, January 4, 2015

முதல் மூன்று நிமிடங்கள் மிகவும் முக்கியம்!

கருத்து வேறுபட்ட கணவன் மனைவியர் உரையாடத் தொடங்கினால் - அவர்களின் உரையாடலின் முதல் மூன்று நிமிடங்கள் எப்படிச் செல்கிறது என்பதை வைத்தே - அவர்கள் கணவன் மனைவியராகத் தொடர்வார்களா அல்லது அது மண விலக்கில் போய் முடியுமா என்று சொல்லி விட முடியுமாம்!

அந்த முதல் மூன்று நிமிடங்கள் அவ்வளவு முக்கியமாம்!

Saturday, December 6, 2014

சுன்னத்தான இல்லறம்! - நூல் வடிவில்.....

சுன்னத்தான இல்லறம்!

(உன் மனைவி ஒரு பொக்கிஷம்!)

S.A  மன்சூர் அலி

முன்னுரை

இன்னும், நீங்கள் அவர்களிடம் மன அமைதி பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே மவத்தத் எனும் அன்பையும், இரக்கத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன்: 30:21)

Friday, December 5, 2014

தொலைபேசி தலாக்!

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள்.

Tuesday, November 18, 2014

இது யார் சொல்லித்தந்ததோ தெரியவில்லை!

"பெண்களைப் போல் அழாதே?!"

"உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்! அதனை வெளிக்காட்டாதே!

"உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான். ஆண்களுக்கு அது பலவீனம்!"

"ஆண்களைப் பொருத்தவரையில் - அவர்கள் - வெளிப்படுத்திடத் தக்க  ஒரு உணர்ச்சி இருக்கிறதென்றால் அது கோபம்மட்டும் தான்!"

Thursday, November 13, 2014

மாய சுழற்சி மறைந்து விட்டதா?

ஒரு ஆண் - தன் மனைவியிடமும், தான் பெற்ற பிள்ளைகளிடமும், மற்றவர்களிடமும் மிக மிக முக்கியமாக எதிர்பார்ப்பது என்ன?

மற்றவர்களால் - தான் - கண்ணியப்படுத்தப்பட வேண்டும்! (To be respected). இதுவே ஒவ்வொரு ஆண்மகனின் முதன்மையான தேவையும், எதிர்பார்ப்பும் ஆகும்! (Primary Need for men).

இதனை அனைவருக்கும் முதலாக ஒரு மனைவி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனின் முதல் தேவையே - அவன் கண்ணியப் படுத்தப்படுவது தான்!

Sunday, November 9, 2014

பாடம் படித்துக் கொள்ள வேண்டியது கணவன் மனைவி இருவரும் தான்!

கணவன் மனைவி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம்.

"ஏங்க! லேட்டாயிடுச்சுங்க! ஏதாவது ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டுப் போயிடலாங்க!" - இது மனைவி.

"ஓக்கே!" - ஒரே வார்த்தையில் பதில்! - இது கணவன்.

"எந்த ஹோட்டல் போகலாம்னு நீங்களே சொல்லுங்க!" - இது மனைவி.

"எதுவானாலும் பரவாயில்லை!" -  நீயே முடிவு பண்ணு!"

Thursday, November 6, 2014

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:

1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.