Thursday, April 24, 2014

எனது சொந்தக் கருத்து ஒன்று!

சுன்னத்தான இல்லறம்

திருமண ஆய்வு மையம் பற்றி எழுதி வருகிறோம் அல்லவா? தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கு திருமணப் பயிற்சி அளிப்பது குறித்தும் எழுதி வருகிறோம் அல்லவா? அவர்களுடைய ஆளுமை மதிப்பீடுகளையும் கோப்புகளில் தயாராக வைப்பது பற்றியும் எழுதியிருக்கிறோம் அல்லவா?


எல்லாவிதமான பயிக்சிகளையும் வழங்கிய பின்பு - அடுத்து என்ன செய்திட வேண்டும் என்றால் -

ஆய்வு செய்திடும் உயர்மட்ட மேலாண்மைக் குழு ஒன்று பதிவு செய்யப்பட்ட ஆண்களின் கோப்புகளையும் பெண்களின் கோப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்குப் பொருத்தமான பெண் யார் யார் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள் என்று பார்த்திட வேண்டும்; அது போலவே ஒரு பெண்ணுக்குப் பொருத்தமான மணமகன்கள் யார் யார் நம்மிடம் உள்ளார்கள் என்றும் பார்த்திட வேண்டும்.

பொருத்தப் பட்டு வரும் ஒரு பெண் பற்றிய தகவல்களை அவருடைய பெற்றோர் அனுமதியுடன் குறிப்பிட்ட இளைஞனுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சந்திப்பு உதவிட வேண்டும். இருவர் குடும்பங்கள் பற்றிய தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.

அந்தக் கருத்துப் பரிமாற்றம் திருமணத்தை நோக்கி அழைத்துச் சென்றால் அல்ஹம்து லில்லாஹ். இல்லாவிட்டால் - இப்படி ஒரு ஏற்பாடு நடந்தது என்று கூட யாருக்கும் தெரியாமல் (confidential) பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நிபந்தனைகள்:

இது விஷயத்தில் யாருக்கும் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இருக்கக் கூடாது!

மிக மிக முக்கியமாக - இது விஷயத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் confidential - ஆக அமானத்தாக பாதுகாக்கப்பட வேண்டும்; மேலாண்மைக் குழு - இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உறுதியான வாக்குறுதியை வழங்கிட வேண்டும்.

இது எனது சொந்தக் கருத்து மட்டுமே!

"நல்ல தூய்மையுள்ள பெண்கள் நல்ல தூய்மையான ஆண்களுக்கும், நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் ( உரியவர்கள் ஆவார்கள்)". (24: 26)

No comments:

Post a Comment