Wednesday, April 16, 2014

சுன்னத்தான ஆறு அறிவுரைகள்!

சுன்னத்தான இல்லறம்: 

(இது கணவன்மார்களுக்கு)

1. பொதுவாகவே பெண்கள் “உணர்வுகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும்! பெண்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில் ஆண்களை விட மிகச் சிறப்பானவர்கள்.


அது போலவே அந்த உணர்ச்சிகளுக்கு சொல் வடிவம் தந்து விலாவாரியாக வர்ணிப்பதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள். ஆனால் பரிதாபம்! ஆண்களின் நிலை இதற்கு நேர் மாறானது! அவர்களால் உணர்ச்சிகளைச் சரிவர புரிந்து கொள்ளவே முடியாது! அது போல உணர்ச்சிகளை அவர்களால் விவரித்துச் சொல்லிடவும் முடியாது!

எனவே உங்கள் மனைவி உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் - அந்த உணர்வுகளை முதலில் புரிந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்! (try to understand their feelings).

2. அவர் தங்கள் உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்தால் - அமைதியாக உள் வாங்கிக் கொள்ளுங்கள்! அது போதும் அவர்களுக்கு! கேள்வியாக ஏதாவது ஒன்றைக் கேட்டால் கூட ஓரிரு வார்த்தைகளில் பதிலைச் சுருக்கி விடுங்கள்!

3. உங்கள் மனைவியின் உணர்வுகளை அங்கீகரியுங்கள் (recognize and validate their feelings); மதியுங்கள்! (respect their feelings); ஏனெனில் உணர்வுகள் அனைத்தும் முற்றிலும் இயல்பானவை! இயற்கையானவை! எல்லோருக்கும்
பொதுவானவை! "உன் கோபம் எனக்குப் புரிகிறது ஆமினா!" - என்று சொல்லிப் பாருங்கள்! கோபம் எல்லாம் அடங்கிப் போய்விடும்!

4. உணர்வு ரீதியான கலந்துரையாடல்களில் - புத்திமதி (advice) சொல்லத் தொடங்கி விடாதீர்கள்! கோபம் வரும் அவர்களுக்கு! மனைவி தன் உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசத்தொடங்கினால் – அவசரப்பட்டு – ஒரு தீர்வை (solution) வழங்கி விடாதீர்கள்! (do not offer any solutions!). ஏனெனில் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது தீர்வுகள் அல்ல! புரிந்துணர்வைத் தான்!

5. அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தியை நீங்கள் மிக அற்பமானது என்று நினைக்கலாம். உங்களுக்கு அவர்கள் பேசுவது bore அடிக்கிறது என்று பேச்சைத் திசை திருப்பப் பார்க்காதீர்கள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை என்று உதறி விடாதீர்கள்! நாளைக்குப் பேசிக் கொள்ளலாமே ப்ளீஸ்! என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன்படி நேரம் கொடுத்து விடுங்கள்!

6. ஆனால் உங்கள் மனைவி சொல்கின்ற செய்தியில் எந்த நியாயமும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதும் கூட = விவாதம் (argument) ஒன்றில் இறங்கி விட வேண்டாம். உணர்ச்சிவசப்பட்ட சூழலில் விவாதங்கள் எடுபடாது என்பதால் அமைதியாக இருந்து விடுங்கள்! பின்னர் அமைதியான சூழல் ஒன்றில் வைத்து மனைவியிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லிக் கொள்ளலாம்!

பின்பற்றிப் பாருங்களேன்!

No comments:

Post a Comment