Thursday, April 24, 2014

மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே உனக்குத் திருமணம்!

சுன்னத்தான இல்லறம்:

(பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண வாழ்வில் தலையிடலாமா?)

ஒரு இளைஞன். பெயர் பஷீர் அஹமத். அவனுக்கு மூன்று தங்கைகள். பஷீருக்கு பதினைந்து வயதாகும் போது தந்தை மாரடைப்பில் இறந்து விட்டார். சொத்துக்கள்? வீடு, கட்டிடம், வயல் என்று - அது ஒரு கோடிக்கு மேல் தேறும்.


பஷீருக்கு படிப்பு வரவில்லை. (எதிர்பார்த்தது தானே!). ஒரு சில ஆண்டுகளிலேயே பயணம் புறப்பட்டு விட்டான், அதாவது அனுப்பி வைக்கப் பட்டு விட்டான். துவக்கத்தில் மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக உயர்ந்து கொண்டே சென்றது. எல்லாவற்றையும் தன் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் பஷீர். ஆண்டுகள் உருண்டோடுகின்றன.

பஷீருக்கு இருபத்து ஐந்து வயது ஆன போது மூத்த தங்கை பாத்திமா நஸ்ரினுக்குத் திருமணம் நடந்தேறியது. மாப்பிள்ளைக்கும் வயது இருபத்து ஐந்து தான்.

பஷீருக்குத் திருமணம் எப்போது? அம்மா அவர்கள் சொல்லி விட்டார்கள் - மூன்று தங்கைகளுக்கும் திருமணம் முடிந்த பிறகே பஷீருக்குத் திருமணம் என்று!

பாத்திமா நஸ்ரினுக்கு வேறு சில இடங்களில் இருந்து பெண் கேட்டு வந்த போது, "மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும்போல் தெரிகிறதே" என்று பஷீரின் தாயார் மறுத்து விட்டதெல்லாம் தனி விஷயம். ஏன் இந்த இரட்டை நிலை?

தங்கைகள் அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டுத் தான் அண்ணன் ஒருவன் தனது திருமணம் குறித்து சிந்தித்திட வேண்டும் என்பது என்ன நியாயம்?

"வயதுக்கு வந்த தங்கைகளை வீட்டில் வைத்துக் கொண்டு அண்ணன்காரனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறீர்களா?" - என்பது பெற்றோரின் நியாயமற்ற வாதம்!

பெண்மக்களை எப்படி "குமரிகளாகப்" பார்க்கிறோமோ அதுபோல் ஆண்மகன்களை ஏன் நாம் "குமரர்களாகப்" பார்க்க மறுக்கின்றோம்? மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பதை எப்படி பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அது போலவே மகனுக்கும் காலா காலத்தில் திருமணம் செய்து வைப்பது தானே நியாயம்?

நியாய உணர்வற்ற பெற்றோர்கள் - இதற்கு சொல்கின்ற இன்னொரு காரணத்தைப் பாருங்கள்:

மகனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டால், அதன் பிறகு அவன் தன் தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் அலட்சியம் வந்து விடுமாம்!?

ஒரு இளைஞனுக்கு வயது இருபத்தியேழு! அவன் தனது திருமணத்தைப் பற்றி சிந்தித்துக் கூட பார்ப்பதற்கு இயலாத சூழலாம்! ஆனால் நாம் கேட்பது என்னவென்றால் - அவனுக்குத் திருமண ஆசை இருக்குமா,இருக்காதா?

உளவியல் அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் - அந்த வயதில் ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோனாகிய - டெஸ்டோஸ்டரோன் - இரண்டு மடங்கு (200%) சுரக்கின்றதாம்!

இப்படிப்பட்ட பாலியல் தூண்டல் (sexual urge) ஒரு இளைஞனுக்கு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அதை யாரிடம் போய் சொல்வான்? திருமணம் குறித்தெல்லாம் சிந்தித்திட முடியாத "சூழ்நிலை" குடும்பத்தில்!

அவன் தனது பாலியல் தூண்டல்களை எப்படித் தணித்துக் கொள்வான்? அவன் கெட்ட வழிகளை நாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பெற்றோர்களுக்குச் சம்மதம் தானா?

என்ன செய்கிறார்கள் நம் இளைஞர்கள்? நோன்பு வைத்துக் கொள்கிறார்கள்! பெற்றோர் பேச்சை மீற முடியாமல் முப்பது வயதைத் தாண்டியும் தன் கடைசித் தங்கைக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்!

தனது திருமணம் குறித்து வீட்டில் பேசத் தயங்குகின்றார்கள். மனம் புழுங்குகின்றார்கள்! வெளியே சொல்ல முடியவில்லை! பிரச்னை எதுவும் இல்லாதது போல் நடித்துக் கொண்டு தங்கள் இளமையை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

என் அருமை இளைஞர்களே! நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உங்கள் திருமணத்தை - ஒத்திப் போட்டு விடுவதன் மூலம் - உங்கள் பெற்றோர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள்! நீங்களோ தோற்றுப் போய் விடுகிறீர்கள்!

YOU LOSE! THEY WIN!!

அப்படியானால் இப்பிரச்னைக்குத் தீர்வு என்ன?

No comments:

Post a Comment