Thursday, April 24, 2014

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு....

சுன்னத்தான இல்லறம்:

இதற்கு முன்னர் நாம் எழுதிய பதிவுகளில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகள் எதனையும் நீங்கள் முன் வைக்கவில்லையே என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு என்பது "பிரச்னைகளின் உலகமாக" மாறி விட்டிருக்கின்றது.

எந்த ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்படவே முடியாத சிக்கலாக (crisis) மாறி மனித சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் புதிய தலைமுறை ஒன்று முளைத்து வந்து இதோ பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம் என்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.

Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking, - என்று புதுப்புது வழிமுறைகளை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றது இந்தப் புதிய தலைமுறை!

இறை வழிகாட்டுதல் என்றால் என்னவென்றே தெரியாத இந்தத் தலைமுறை, ஏதோ அவர்களுக்குத் தெரிந்த அறிவை வைத்துக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டு - எடுத்துக் கொண்ட பிரச்னைகளுக்குத் தீர்வும் சொல்கிறார்கள்; தீர்த்தும் வைக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அவர்கள் முன் வைக்கும் எல்லாத் தீர்வுகளுமே சரியானவை என்று நம்மால் சொல்ல முடியாது தான்! அதே நேரத்தில் அவர்களின் எல்லாத் தீர்வுகளுமே தவறானவை என்றும் சொல்லி விட முடியாது!

அவர்கள் தரும் தீர்வுகளுள் சிலவற்றை நாம் ஆய்வு செய்து பார்த்தால் அது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்ட தீர்வுகளை ஒத்திருப்பது தெரிய வருகிறது!

ஆனால் - எங்களிடம் குர்ஆன் இருக்கின்றது, நபிவழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாதவர்களாக நாம் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

இது உண்மையா? இல்லையா?

இங்கே - நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பிரச்னை - சாதாரணமானதாக ஒன்றாக இருந்தால் - ஒரு வரியில் தீர்ப்பு சொல்லி விடலாம் தான்!

நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது சாதாரணப் பிரச்னை அல்லவே! சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற ஆழமான தீமை ஒன்றைப் பற்றியல்லவா நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்!

உன்னைப் பார்த்து நான், என்னைப்பார்த்து என் பக்கத்து வீட்டுக்காரன் என்று - தலைமுறை தலைமுறையாய் ஒரு தொடர்கதையாய்ப் போய் விட்ட தொற்று நோய் அல்லவா இது!

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டு மொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்று "அடித்தளத்தில் ஓட்டை போடப்பட்ட கப்பலாய்" நம்மை மாற்றியிருக்கும் பிரச்னை தானே இது!

எனவே நாம் - குர் ஆன் மற்றும் நபிவழி ஆகியவற்றுடன் - Critical thinking, creative thinking, lateral thinking, complex thinking - போன்ற நவீன வழிமுறைகளையும் கையிலெடுத்துக் கொண்டு நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டிடும் அழகிய தீர்வு ஒன்றை சுன்னத்தான இல்லறத்தில் எழுத உள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

இதற்கு ஆய்வுக் கண்ணோட்டம் மிக்க சகோதர சகோதரிகளின் கருத்து ரீதியான பங்களிப்பு மிகவும் அவசியம்.

நமது நோக்கமெல்லாம் நமது சகோதர சகோதரிகளின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும், மன நிம்மதியையும், நேசத்தையும், கருணையையும் மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பது தான்!

இதற்காகத் துவக்கப்பட்டதே சுன்னத்தான இல்லறம்!

தீர்வு - விரைவில்!! 

No comments:

Post a Comment