Saturday, April 19, 2014

கண் குளிர்ச்சி காணாமல் போனது எப்படி?

சுன்னத்தான இல்லறம்:

வல்லோன் அல்லாஹு தஆலா நம்மைக் கேட்கச் சொல்லும் ஒரு துஆ - நாம் அனைவரும் அறிந்த துஆ தான்

அது:


"மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக)
ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்." (25:74)

மேற்கண்ட இறை வசனத்தில் "அஸ்வாஜினா" என்ற ஒரு சொற்றொடர் வருகிறது. இதற்கு "எங்கள் மனைவியரிடமும்" என்று மொழிபெயர்க்கப் படுகிறது. ஆனால் "துணைவர்களிடமும்" என்று மொழிபெயர்ப்பதே சரியானது!    

ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ் என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு  one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது.

“ஜோடி” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

மேற்கண்ட திருமறை வசனத்தை -

மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் துணைவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.” -

என்று மொழி பெயர்ப்பதே சரியானது.  (அல்லாஹ்வே மிக அறிந்தவன்.)

முஹம்மது அஸத் அவர்கள் தமது ஆங்கில மொழிபெயர்ப்பில் azwaaj என்பதற்கு spouses என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

“and who pray: “O our Sustainer! Grant that our spouses and our offspring be a joy to our eyes, and cause us to be foremost among those who are conscious of Thee!”

Spouses  என்பதற்கு துணைவர்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு!

எனவே – கணவர்கள் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!”  – என்றும்,

அது போலவே – மனைவியர் துஆ செய்திடும்போது “எங்கள் இறைவா! எங்கள் கணவர்களிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” – என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நாம் இங்கே இதனை எடுத்து எழுதுவதன் நோக்கம் - நல்லதொரு மொழிபெயர்ப்புக்காக அன்று!

நாம் இதனை இங்கே எழுதுவதன் நோக்கம் கேள்வி ஒன்றை உங்களிடம் கேட்டிடத்தான்:

அது என்ன கேள்வி?

கணவன் மூலம் மனைவிக்கும், மனைவி மூலம் கணவனுக்கும் கண் குளிர்ச்சி என்பது - இருக்கிறதா என்ன?

அது கானல் நீராகிப் போய் விட்டதா என்ன? அதனைக் காணாமல் அடித்தது யார்?

யார் என்று தெரிந்த பின்னும் ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளவில்லை! 

No comments:

Post a Comment