Friday, May 30, 2014

என்னிடம் திரும்பு! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!

சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் மனைவியருக்கு நிறைய இருக்கும். கணவன்மார்களுக்கோ – “இது ஒரு பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இவள் இப்படி அலட்டிக் கொள்கிறாள்?” என்றே எண்ணத் தோன்றும்.

ஆனால் தமது சின்னச் சின்ன ஆசைகள் – கணவனால் – தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப் படும்போது மனைவி என்ன நினைக்கிறாள்? “நான் இவ்வளவு சொல்லியும் இவர் கேட்கவில்லை என்றால் என்ன பொருள்? எனது உணர்வுகளை இவர் மதிப்பதே இல்லை!” என்பது தான்!


எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதை நீங்கள் உங்கள்  இல்லற வாழ்வின் ஒரு மிக முக்கியமான அங்கமாகவே ஆக்கிக் கொள்ள வேண்டும்!

“இதப்பாருங்க, இன்னிக்கு உங்க அம்மா படுத்துன பாட்டை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும். உட்காருங்க!” – இது மனைவி.

“அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதறகு எனக்கு நேரமில்லை!” என்று நீங்கள் சொல்ல வேண்டாம்.

மாறாக – “இப்போது வேண்டாமே! நாளை காலையிலே பேசிக் கொள்வோமே!” – என்று சொல்லிப்பாருங்கள்.

சொன்னபடியே மறுநாள் காலையில் உட்கார்ந்து பொறுமையாக உங்கள் மனைவி சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டிருங்கள். இதுவே அவர்களின் பெரிய எதிர்பார்ப்பு உங்களிடம்.

(எச்சரிக்கை: அவர்கள் பேசும்போது நீங்கள் குறுக்கிடக்கூடாது; விமர்சிக்கக் கூடாது! புத்திமதி சொல்லிடக்கூடாது!)

“என்னிடம் திரும்பு! என்னைப் பார்! என்னைக் கவனி! நான் சொல்வதைக் கேள்! அது போதும் எனக்கு!” – இதுவே மனைவியரின் தாரக மந்திரம்!

நபியவர்களின் முன்மாதிரி நமக்கெல்லாம் தெரியும் தானே? தம் மனைவியரின் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் – அவர்களின் ஆசை தீர நிறைவேற்றிக் கொடுப்பவர்கள் தானே அண்ணலார் அவர்கள்!

பின்பற்றிப்பாருங்கள்! பன்மடங்கு பலனை அனுபவிப்பீர்கள்!!

No comments:

Post a Comment