Friday, May 2, 2014

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுன்னத்தான இல்லறம்: 

இப்படியும் சில பெற்றோர்கள்! இப்படியும் சில பிள்ளைகள்!

இவர்கள் - மார்க்கத்தைப் பின்பற்றும் பிள்ளைகள். இப்போது திருமணம் ஆகி விட்டது. அதே நேரத்தில் பெற்றோர்களும் மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்கள்!

இந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண விஷயங்களில் தலையிடுவதை விரும்பாமல் - அவர்களை சற்று தூரவே வைத்து அழகு பார்ப்பவர்கள்.


பிள்ளைகளும் அடிக்கடி வந்து பெற்றோர்களை கவனித்துக் கொள்கின்றார்கள். பெற்றோருக்குச் செய்திட வேண்டிய  கடமைகளை நிறைவேற்றித் தருவதில் எந்தக் குறையும் இவர்கள் வைப்பதில்லை! மாமியார், நாத்தனார் பிரச்னைகள் இங்கு அறவே கிடையாது!

எனது நண்பர் ஒருவர். அவருடைய தாயும் தந்தையும் சொந்த ஊரில் தனியே தான் வசிக்கிறார்கள். இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்று விட்டார். மூத்த மகன் அதே ஊரிலேயே வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்துகிறார்.

தம்பி தான் எனது நண்பர். அவருக்கும் அதே ஊரிலேயே பெண் பார்த்து, திருமணம் முடிந்த உடனேயே வாடகைக்கு வீடு ஒன்று பார்த்து இரண்டாம் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் இருக்குமாறு வலியுறுத்தி வாழ
வைத்திருக்கிறார் அந்த அருமையான தாய்.

நான் என் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த போது காலையில் அவருடைய தாயும் தந்தையும் அங்கு வந்திருந்தார்கள். மாலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். மூத்த மகன் வீட்டுக்குச் சென்றாலும் அப்படித்தானாம்!

பிள்ளைகளின் திருமண வாழ்வில் கொஞ்சம் கூடத் தலையிடாமல், அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதை சற்று தூரத்திலேயே இருந்து கொண்டு ரசிக்கின்ற மனப்பக்குவம் நம்மை மலைக்க வைக்கிறது!

இப்படிப்பட்ட பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

No comments:

Post a Comment