கணவன் மனைவி இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான கருத்து வேறுபாடு. கோப உணர்ச்சி கொப்பளிக்கிறது.
அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்த சூழல் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பேச்சைத் துவங்கி விடக்கூடாது.
ஒரு சூழ்நிலை.
கணவனும் மனைவியும் வீட்டில்…
“ஏம்மா! சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு! பீச்சுக்குப் போகலாம்! இது கணவன்.
ஆமா! அது ஒண்ணு தான் குறைச்சல்!” இது மனைவி.
ஆமாம்மா! உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு; பீச்சிலே பேசுவதற்கு வசதியாக இருக்கும்ல!
ஆமாம்! நீங்க பேசிக் கிழிச்சதெல்லாம் போதும்!
உடனே கணவன் தன் மனைவியைக் கோபமாகத் திட்ட மனைவியும் பதிலுக்குத்திட்ட இந்த இந்த “அழகிய உரையாடலைக்” காதில் வாங்குவது யார் யார்?
அவர்களுடைய பன்னிரெண்டு வயது மகள்! ஹாலில் அமர்ந்து கொண்டு பாடம் படித்துக் கொண்டிருக்கின்றாள்.
கணவனின் தம்பி மனைவி! தம்பியின் அறையிலிருந்து சமையலைக்குச் செல்லும் சமயத்தில் அவர் காதிலும் விழுகிறது!
இங்கே கணவனின் ஈகோ தலையெடுக்குமா எடுக்காதா?
சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறிய கணவன் என்ன செய்வான்?
“உன்னிடம் பேச நினைத்தேனே! என்னைச் செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்!”
“ஆமா! அது ஒன்னு தான் பாக்கி!”
***
எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!
எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?
வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.
குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.
வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.
கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.
அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.
வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.
குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!
கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.
சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.
கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.
எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!
அது குறித்துப் பேசி விடலாம் என்று கணவனோ அல்லது மனைவியோ நினைக்கிறார்கள். ஆனால் அதற்குத் தகுந்த சூழல் ஒன்றை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அவர்கள் தங்கள் பேச்சைத் துவங்கி விடக்கூடாது.
ஒரு சூழ்நிலை.
கணவனும் மனைவியும் வீட்டில்…
“ஏம்மா! சாயங்காலம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு! பீச்சுக்குப் போகலாம்! இது கணவன்.
ஆமா! அது ஒண்ணு தான் குறைச்சல்!” இது மனைவி.
ஆமாம்மா! உன் கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு; பீச்சிலே பேசுவதற்கு வசதியாக இருக்கும்ல!
ஆமாம்! நீங்க பேசிக் கிழிச்சதெல்லாம் போதும்!
உடனே கணவன் தன் மனைவியைக் கோபமாகத் திட்ட மனைவியும் பதிலுக்குத்திட்ட இந்த இந்த “அழகிய உரையாடலைக்” காதில் வாங்குவது யார் யார்?
அவர்களுடைய பன்னிரெண்டு வயது மகள்! ஹாலில் அமர்ந்து கொண்டு பாடம் படித்துக் கொண்டிருக்கின்றாள்.
கணவனின் தம்பி மனைவி! தம்பியின் அறையிலிருந்து சமையலைக்குச் செல்லும் சமயத்தில் அவர் காதிலும் விழுகிறது!
இங்கே கணவனின் ஈகோ தலையெடுக்குமா எடுக்காதா?
சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறிய கணவன் என்ன செய்வான்?
“உன்னிடம் பேச நினைத்தேனே! என்னைச் செருப்பால் தான் அடித்துக் கொள்ள வேண்டும்!”
“ஆமா! அது ஒன்னு தான் பாக்கி!”
***
எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!
எந்தெந்தச் சூழலிலெல்லாம் அவர்கள் பேசிடக் கூடாது?
வீட்டில் மற்ற உறவினர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு மத்தியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறித்து வாய் திறக்க வேண்டாம். அங்கே ஈகோ தலையெடுக்கத் துவங்கி விடும்.
குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு உங்கள் விவாதங்களைத் தொடங்கிட வேண்டாம். அது அவர்களை மிகவும் பாதிக்கும்.
வீட்டில் குழந்தைகளும் இல்லை; உறவினர்களும் இல்லை. நீங்கள் இருவர் மட்டும் தனியே என்றாலும் கூட உரத்தக் குரலில் இருவரும் பேசிட வேண்டாம். அக்கம்பக்கத்தார் இருக்கிறார்கள்.
கணவன் மனைவி இருவரும் பஸ் அல்லது ரயிலில் பயணிக்கிறீர்களா? சுற்றிலும் பயணிகள் சூழ்ந்திருக்க நீங்கள் உங்கள் பாட்டுக்கு உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேசிடத் துவங்கி விடாதீர்கள்.
அல்லது நீங்கள் இருவருமாக காரில் செல்கிறீர்களா? நீங்களே ஓட்டுனர் என்றால் பரவாயில்லை. ஆனால் காரை ஓட்டுவது ஒரு டிரைவர் எனில் உங்கள் குடும்ப விஷயங்களைப் பேசாதீர்கள். அங்கே டிரைவர் நீங்கள் பேசுவதை உற்றுக் கேட்கக்கூடும்.
வெளியே இருவரும் நடந்து செல்கிறீர்களா? முன்னும் பின்னும் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு பேச்சைத் துவக்கி விடாதீர்கள். “ஆமா! யாரு நாம பேசுறத கேட்டுக்கிட்டு இருக்காங்க?” என்று உங்கள் துணை பேசத் தொடங்கினால் பதில் பேசாதீர்கள்.
குடும்ப விஷயங்களை கடைகளில் பொருட்கள் வாங்கும் சமயத்திலும் பேச வேண்டாம்!
கணவன் – மனைவி கருத்துரையாடலுக்கு மேற்கண்ட சூழ்நிலைகளை நாம் தவிர்க்கச் சொல்வதற்குக் காரணம் – ஒருவர் மானத்தை மற்றவர் காத்திட வேண்டும் என்பதற்காகத் தான்.
சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பேசத் தொடங்கினால் என்னவாகும்? சாதாரணமாகத் தான் பேச்சு தொடங்கும். ஒரே ஒரு வார்த்தை உங்கள் உரையாடலை – விவாதமாக மாற்றி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை.
கணவனோ அல்லது மனைவியோ – இருவரில் ஒருவர் எதற்கெடுத்தாலும் “சண்டை போடக்கூடிய” மனிதராக இருந்து விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. மேற்கண்ட சூழ்நிலைகளில் எதுவாக இருந்தாலும் – பேசுவதைத் தவிர்த்திடா விட்டால் அது கணவன் மனைவி உறவை மேலும் சிக்கலாக்கி விடும்.
எனவே தான் சொல்கிறோம்: சூழ்நிலை அறிந்து பேசுங்கள்!
No comments:
Post a Comment