Thursday, March 27, 2014

உண்மையான காதலுக்கு இஸ்லாம் என்றுமே தடை விதித்ததில்லை!

சுன்னத்தான இல்லறம்:

ஆணாகவும் பெண்ணாகவும் மனித இனத்தைப் படைத்த இறைவன் அவர்களுக்குள் இயல்பாகவே ஒரு ஈர்ப்புத் தன்மையை உண்டாக்கியிருக்கிறான்.

ஆனால் அந்த ஈர்ப்பு என்பது வெறும் உடலளவில் மட்டுமே என்று இருந்து விட்டால், அதற்குப் பெயர் காதல் அல்ல! காமம்! அந்த உறவுக்கு ஆயுள் கொஞ்ச நாட்களே! இதனை ஆங்கிலத்தில் - short term connection -
என்கிறார்கள். அதாவது குறுகிய கால இணைப்பு!

உடல் இச்சை தீர்க்கப்பட்ட பின் தூக்கியெறிந்து விட்டுப் போய் விடுவார்கள் - குறிப்பாக ஆண்கள். ஏமாறுவது அப்பாவிப் பெண்களே! (இதற்கு உவமானம் வேறு ஒன்று சொல்வார்கள்: "சப்பி துப்பிப் போடப்பட்ட மாங்கொட்டையைப் போல!")


ஆனால் நாம் இங்கே இத்தகைய காதலைப் பற்றிப் பேச வரவில்லை!

ஆணுக்கும் பெண்ணுக்கும் வல்லோன் அல்லாஹு தஆலா ஏற்படுத்தியிருக்கும் அந்த இயல்பான ஈர்ப்புத்தன்மை வெறும் உடலளவில் என்று மட்டும் இல்லாமல், இருவரின் அறிவிலும் (minds), இருவரின் இதயங்களிலும்(hearts), இருவரின் ஆன்மாக்களிலும் (souls) - ஒரு நெருக்கத்தை, ஒரு நட்பை, ஒரு இனம் புரியாத பிரியத்தை ஏற்படுத்தினால் அதுவே உண்மையான காதல்!

இந்தக் காதல் - அவர்கள் இருவரையும் ஒரு நீண்ட கால உறவுக்கு இட்டுச் செல்கிறது, அந்த இருவரும் நீண்ட கால நண்பர்களாக (soul-mates) ஆகி விடுகிறார்கள்.

இதனை ஆங்கிலத்தில் - long term relationship - என்று அழைக்கிறார்கள்.

இந்த நீண்ட கால உறவுக்கு வழி வகை செய்வதே திருமணம்!

இதுவே உண்மையான காதல்! இதுவே உண்மையான காதல் திருமணம்!

இந்த நபிமொழியைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

"There has not been a better choice for lovers but to marry." (Ibn Majah)

காதலர்கள் இருவருக்கும் - "திருமணம் செய்து கொள்வது" என்பதை விட சிறந்த முடிவு வேறு எதுவும் இல்லை! (இப்னு மாஜா)

இப்போது காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்கள் காதல் உடலால் ஈர்க்கப்பட்ட காதலா? உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட காதலா?

சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

ஏனெனில் இரண்டின் விளைவுகளுமே வெவ்வேறானவை:

ஒன்று: குறுகிய கால "இணைப்பு"; மற்றது நீண்ட கால பிரிக்க முடியாத உறவு!

எது வேண்டும் உங்களுக்கு?

No comments:

Post a Comment