Friday, March 21, 2014

மூன்று காதல் மொழிகள்! - 3

சுன்னத்தான இல்லறம்:

மூன்றாவது: என்னைத் தொடு! (TOUCH ME!)

கணவன் மனைவியர் தொடுதலைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும் என்று கேட்பீர்கள்! ஆம்! நிறைய சொல்ல வேண்டியிருக்கின்றது!

ஏனெனில் - திருமணமான புதிதில் இருக்கும் தொடுதல்கள் எல்லாம் நாட்களாக ஆக படிப்படியாகக் குறைந்து போய் விடுகிறது பலருக்கு! பெரும்பாலும் இதில் ஏமாற்றத்துக்கு ஆளாவோர் மனைவியர்களே!


எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கணவன் மனைவியருக்குள் தொடுதல் என்பது கொஞ்சமும் குறைந்து போய் விடக்கூடாது என்பதற்கே இப்பதிவு!

இனி அன்றாடம் இதனை செயல்படுத்துவது பற்றி கொஞ்சம் எழுதுவோம். தவறாக எண்ண வேண்டாம்!

உங்கள் கணவர் வேலைக்குப் புறப்படுமுன்பு, அவரை அப்படியே அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்புங்களேன்! இது உங்கள் வழக்கமாகவே ஆகி விட வேண்டும்!!

வேலையை விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டால், கை கால்களைப் பிடித்து விட்டு, கழுத்துப் பகுதியிலும், முதுகிலும் மஸாஜ் (massage) செய்து விடுங்களேன். நாள் முழுவதும் ஏற்படுத்திய களைப்பு அடியோடு பறந்து போய் விடுமே!

ஏன்? ஒரே பாத்திரத்தில் இருவரும் குளிக்கலாம் தானே! ஒரே குவளையில் வாய் வைத்து அருந்தலாம் தானே! இவைகளும் நபிவழிகள் தானே!

மனைவியுடன் பேசும்போது கூட கையைப் பிடித்துக் கொண்டு பேசுங்களேன்!

உறவுக்கு முன் - முன் விளையாட்டு (FOREPLAY) கூட நபி வழிதானே!

நபிமொழிகள் நிறைய இருக்கின்றன; விரிவஞ்சி - சமீபத்தில் படித்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்வோம்:

அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவப் பணியின் சுமையை நாமெல்லாம் அறிவோம்.

அழைப்புப்பணி, ஷரீஅத் சட்டங்களை நிலைநிறுத்துதல், நபித்தோழர்களுக்குக் கல்வி, இஸ்லாமிய அரசைப் பாதுகாத்தல் - இவை மட்டுமல்லாமல் - அவர்களுடைய தொழுகை, நோன்பு, மற்றும் குர்ஆன் ஓதுதல், கால் வலிக்க இரவில் எழுந்து தொழுதல்... இவை எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கியது போக தம் மனைவியருக்கென்று ஒதுக்கிட என்ன நேரம் மிச்சமிருந்திருக்கும் நபியவர்களுக்கு?

இது குறித்து இமாம் இப்னுல் கைய்யும் அவர்கள் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்கள்:

When he prayed `Asr he used to pass by his wives and be informed of their affairs, and when night came he would go to the one whose turn it was.

`A'ishah said, 'He never stayed with any of us more than the others, and it rarely happened that he did not visit all of us and come closer to each of us without touching until he reached the one who had the turn so he would stay overnight with her.'

நபியவர்கள் அஸ்ர் தொழுகை தொழுததும் - தம் மனைவியர் அனைவரிடமும் அவர்கள் செல்வார்கள்; அவர்களின் நலன் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்; இருள் சூழ்ந்ததும் - எந்த மனைவி வீட்டில் அன்று தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

ஆயிஷா அவர்கள் சொல்கிறார்கள்: நபியவர்கள் எந்த ஒரு மனைவியிடமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக தங்கி விட மாட்டார்கள்; எங்கள் அனைவரையும் (மனைவியரையும்) சந்திக்காமல் அவர்கள் ஒருநாளும் இருந்ததில்லை! எங்கள் ஒவ்வொருவரிடமும் மிக நெருக்கமாக இல்லாமல் அவர்கள் செல்வதே இல்லை! எங்கள் ஒவ்வொருவரையும் தொடாமலும் அவர்கள் சென்றது கிடையாது! இவ்வாறு அனைத்து மனைவியரிடமும் நேரத்தைச் செலவிட்ட பிறகே - அன்று எந்த மனைவியின் வீட்டில் தங்க வேண்டுமோ அங்கே சென்று தங்குவார்கள்!

இதில் கவனிக்க வேண்டியது இது தான்:

எங்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தொடாமல் சென்றதே இல்லை!

அப்படியானால் ஒவ்வொரு நாளும் மனைவியைத் தொடுவது என்பது சுன்னத் என்றல்லவா ஆகிறது!

ஒரு நிமிடம் - மேலே படிப்பதை நிறுத்து விட்டு - இது விஷயத்தில் உங்களை நீங்களே - எடை போட்டு விட்டு மேலே தொடருங்கள்.

அடுத்து நடந்த சம்பவம் ஒன்று - சற்றே கற்பனையுடன்!

ஒரு பெண் - மண விலக்கு கேட்டு (ஃகுலா) விண்ணப்பிக்கிறார்; ஜமாஅத்தில் விசாரிக்கிறார்கள்; கொடுக்கல் வாங்கலில் பிரச்னையாம்; வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் - மனைவியைத் தொடக்கூடாது என்று "அம்மா" உத்தரவு போட்டு விட்டார்களாம்;

அந்த இளம் மனைவி சொல்கிறார்: அவர் பயணம் வந்து பதினைந்து நாட்கள் ஆகி விட்டன! அவருடைய விரல் நுனி கூட இன்னும் என் மீது படவில்லை!!! இவருடன் நான் எப்படி வாழ்வது?

நீங்கள் - இந்தத் தொடுதல் குறித்து இன்னும் நிறைய சிந்திக்க வேண்டும்!

No comments:

Post a Comment