Thursday, November 6, 2014

கணவன் மனைவியருக்குள் விவாதமா?

கணவன் மனைவி விவாதங்களின் போது மூன்று விஷயங்களைக் கடைபிடிப்பது அவசியம் என்று இஸ்லாமிய அறிஞரும், குடும்ப நல ஆலோசகருமான ஷேஃக் யாசிர் ஃபஸாஃகா அவர்கள் கற்றுத் தருகிறார்கள்:

1 நாம் சொல்ல வருகின்ற கருத்து ஒன்றும் அவ்வளவு முக்கியம் அல்ல! நாம் யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அந்தத் துணை நமக்கு முக்கியம். இதனையே அவர் - "The person is always more important than the point!" என்கிறார்.


2 நாம் சொல்ல வருகின்ற கருத்து மிகவும் சரியாகக்கூட இருக்கலாம். ஆனால் - யாரிடம் அந்தக் கருத்தைச் சொல்ல வருகின்றோமோ அவர் மீது கருணை காட்டுதல் அந்தக் கருத்தைவிட முக்கியம். இதனையே அவர் - "Being kind is more important than being right!" என்கிறார்.

3 உங்கள் உள்ளத்தில் எதனை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதனையே நேரடியாகச் சொல்லுங்கள்; எதனை நீங்கள் சொல்கின்றீர்களோ - அதனையே உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். இதனையே - "Say what you mean and mean what you say! " என்கிறார் அவர்.

கடைபிடித்துப் பாருங்கள்! இது முழுக்க முழுக்க சுன்னத்தான ஒரு அணுகுறை!

No comments:

Post a Comment